இந்தியா

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போட திட்டம்

Published On 2023-02-13 08:27 IST   |   Update On 2023-02-13 11:38:00 IST
  • கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 25 சதவீதம் பேர், இந்திய பெண்கள்.
  • 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்.பி.வி. தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி:

உலக அளவில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 25 சதவீதம் பேர், இந்திய பெண்கள் ஆவர். ஆண்டுதோறும் 80 ஆயிரம் இந்திய பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 35 ஆயிரம் பேர் மரணத்தை தழுவுகின்றனர்.

இதை கருத்தில்கொண்டு, 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்.பி.வி. தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக, கர்நாடகா, தமிழ்நாடு, மிசோரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த மாநிலங்களில் மொத்தம் 2 கோடியே 55 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News