தமிழ்நாடு செய்திகள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: மீண்டும் தொடங்கியது
- காளைக்கு காலில் அடிப்பட்ட காரணத்தால் 10 நிமிடம் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
- போட்டியின் 8வது சுற்று ஆரம்பமாகி காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 7 சற்று நடைப்பெற்று கொண்டிருக்கும் போது 556 காளைகள் அவிழ்த்த பின்பு ஒரு காளைக்கு காலில் அடிப்பட்ட காரணத்தால் 10 நிமிடம் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
காளையானது சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டது. இந்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தொடந்து நடைப் பெற்று வருகிறது. போட்டியின் 8வது சுற்று ஆரம்பமாகி காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர்.