தமிழ்நாடு செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை வனத்துறையினரை விரட்டிய காட்சி.

வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்தது: வனத்துறையினரை துரத்திய ஒற்றை காட்டு யானை

Published On 2023-10-17 12:53 IST   |   Update On 2023-10-17 12:53:00 IST
  • யானை ஊருக்குள் வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
  • வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையிடம் போ ராசா. இது மக்கள் வாழும் பகுதி வராதே என சத்தமாக பேசி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது,

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து மளிகை கடை, சத்துணவு மையம், வீடுகள் போன்றவைகளை உடைத்து உணவுகளை சாப்பிட்டு சென்று வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

பின்னர் வீடுகளில் அருகில் யானை சுற்றி வந்தது.

யானை ஊருக்குள் வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையை விரட்டும் பணிகள் ஈடுபட்டனர்.

அப்போது வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையிடம் போ ராசா. இது மக்கள் வாழும் பகுதி வராதே என சத்தமாக பேசி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது யானை திடீரென வேட்டை தடுப்பு காவலர்களை நோக்கி விரட்டி வந்தது. இதனால் அவர்கள் அச்சம் அடைந்து ஓடினர். பின்பு யானையிடம் சத்தமாக பேசி வனப்பகுதிக்கு விரட்டினர். யானையும் அவர்களின் பேச்சை கேட்டு அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது.

வேட்டுத்தடுப்பு காவலர்கள் யானையிடம் பேசியே யானையை விரட்டியது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News