தமிழ்நாடு

சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரெயில் பாலம் சரிந்து விபத்து

Published On 2024-01-18 13:39 GMT   |   Update On 2024-01-18 13:39 GMT
  • ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது விபத்து.
  • போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக பெரும் விபத்து தவிர்ப்பு.

சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இணைக்கும் பறக்கும் ரெயில் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு, ரெயில்வே தூண் பாலம் இணைக்கும்போது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து பகுதியில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்தில், யாருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News