ஆண்டிபட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
- முதல் மகளுக்கு தேனி அம்மாபட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொடுத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முருக்கோடை ராயர்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு தேனி அம்மாபட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு குழந்தை பிறந்ததையடுத்து தனது மனைவியுடன் பேத்தியை பார்க்க புறப்பட்டார்.
அப்போது 2 வது மகளான 10ம் வகுப்பு படிக்கும் கோபிகா (14) என்பவர் தானும் உடன் வருவதாக கூறி உள்ளார். அதற்கு அடுத்தமுறை செல்லலாம் என்றும், வீட்டிலேயே இருக்குமாறு கூறி விட்டு முருகன் தனது மனைவியுடன் சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த கோபிகா தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.