தமிழ்நாடு செய்திகள்

வாணியம்பாடி அருகே சோகம் - வேனும், லாரியும் மோதிய விபத்தில் 7 பேர் பலி

Published On 2023-09-11 05:27 IST   |   Update On 2023-09-11 05:27:00 IST
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலை விபத்து நிகழ்ந்தது.
  • இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். சண்டியூர் பகுதியில் வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பும்போது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் ஆம்பூர் ஒனாங்குட்டை பகுதியைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளாதவும், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா சென்று வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News