தமிழ்நாடு

பூண்டியில் டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் கசிந்து 3 மாடுகள் பலி

Published On 2023-09-28 07:44 GMT   |   Update On 2023-09-28 07:44 GMT
  • வடிவேல் 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
  • அருகில் பொதுமக்கள் யாரும் செல்லதாதல் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

திருவள்ளூர்:

பூண்டி, புஷ்பகிரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை பூண்டி பகுதியில் பலத்த மழை பெய்தபோது அவரது 3 மாடுகள் வயல்வெளி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்றன.

அந்த நேரத்தில் டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு ஏற்பட்டதால் 3 பசுமாடுகளும் மின்சாரம் பாய்ந்து இறந்தன. அருகில் பொதுமக்கள் யாரும் செல்லதாதல் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

Tags:    

Similar News