தமிழ்நாடு
மீதமான உணவை சாப்பிட்ட 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
- மீதமான உணவான தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
- உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி:
பண்ருட்டியில் நடந்த தேமுதிக போராட்டத்தில் மீதமான உணவு முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
மீதமான உணவான தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உணவை சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.