தமிழ்நாடு

21-ம் ஆண்டு நினைவுநாள்: மூப்பனார் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

Published On 2022-08-30 10:32 GMT   |   Update On 2022-08-30 10:32 GMT
  • மறைந்த த.மா.கா. நிறுவன தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 21-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
  • சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை:

மறைந்த த.மா.கா. நிறுவன தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 21-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மூப்பனார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், ஐ.ஜே.கே. கட்சி செயல்தலைவர் ரவி பச்சமுத்து, சேம.நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விடியல் சேகர், த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், வர்த்தகர் பிரிவு தலைவர் ஆர்.எஸ். முத்து, மாநில பொதுச் செயலாளர் பி.ஜவஹர் பாபு, மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், சத்திய நாராயணன், கோவிந்தசாமி, பீ.ஜு.சாக்கோ, அருண்குமார், பாலா, ஆர்.புனிதன், என்.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர் வி.எம்.சரவணன், கிண்டி மம்மு, மாதவரம் வினோபா, மூலக்கடை நித்யானந்தம், இலக்கிய அணி செயலாளர் கே.ஆர்.டி.ரமேஷ், முனவர் பாட்ஷா, ராணி கிருஷ்ணன், ஆர்.கே.நகர் செல்வகுமார், குரோ ம்பேட்டை டி.என்.அசோகன், லீக் பரமசிவம், சேலம் உலக நம்பி, ஆதம்பாக்கம் குருமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News