தமிழ்நாடு செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோரை படத்தில் காணலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

Published On 2022-04-18 12:40 IST   |   Update On 2022-04-18 12:40:00 IST
தமிழக கவர்னர், ஆர்.என்.ரவி கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கும் சாமி தரிசனம் செய்தார்.
சிதம்பரம்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சிதம்பரத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் வந்தனர்.

அவர்கள் இன்று காலை நடராஜர் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் பொதுதீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

பின்னர் கோவிலுக்குள் சென்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானை தரிசனம் செய்தனர். தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்து பொன்னாடை, மாலை அணிவித்து பிரசாதத்தை வழங்கினர்.

பின்னர் கவர்னர், கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்த ராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கும் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Similar News