தமிழ்நாடு
கமல்ஹாசன்

மீன்பிடி தடைக்காலம்: மீனவர்கள் நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்- கமல்ஹாசன் வலியுறுத்தல்

Published On 2022-04-16 11:09 GMT   |   Update On 2022-04-16 11:09 GMT
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த 15-ந்தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. 61 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம் ஜூன் 14-ந்தேதி நிறைவு பெறுகிறது. இந்த காலகட்டத்தில் ஆழ்கடல் விசைப்படகுகள், மோட்டார் பொறுத்தப்பட்ட நாட்டு படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரையோரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும்.

இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு மீனவர்கள் நிவாரணத்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும்’, என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News