தமிழ்நாடு செய்திகள்
தொடர் விடுமுறை- ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அங்கு படகு சவாரி செய்து தங்கள் பொழுதை போக்கினர்.
ஊட்டி:
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் தொடங்கியுள்ளதால், மக்கள் இதமான கால நிலை உள்ள ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக படையெடுத்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை கொண்டாடி மகிழ சுற்றுலா தலமான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் மாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். நேற்று காலையும், இன்றும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் கார், பஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர்.
ஊட்டிக்கு செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தி, காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அங்கு மலர் கண்காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு வரும் மலர் செடிகளை பார்வையிட்டனர்.
மேலும் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் உள்ள அரியவகை செடிகள், மரங்களையும் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள புல் தரையில் அமர்ந்து பேசியும், குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.
ஊட்டி படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அங்கு படகு சவாரி செய்து தங்கள் பொழுதை போக்கினர்.
அரசு ரோஜா பூங்கா, பைக்காரா மற்றும் ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, கொடநாடு காட்சி முனை, லேம்ஸ்ராக், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக சுற்றுலா தலங்களை ஒட்டிய கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
கொடைக்கானலில் நேற்று முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே டோல்கேட்டில் 3 கி.மீ. தூரம்வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
அதன் பிறகும் வாகனங்கள் கடந்து செல்ல 1 மணிநேரத்திற்கும் மேலானது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் விட்டுவிட்டு சாரல்மழையும் பெய்த வண்ணம் இருப்பதால் நெரிசலில் சிக்கிய சுற்றுலா பயணிகள் தங்கள் ஓட்டல் அறைக்கு செல்ல சிரமப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் பேக்கேஜ் விடுமுறையில் வந்திருப்பதால் அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுற்றுலா இடங்களை பார்வையிட பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இன்று அதிகாலை சூரியோதம் பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டனர்.
அவர்களில் பலர் ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். மேலும் படகுகள் மூலம் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்று ரசித்தனர். பகவதி அம்மன் கோவிலிலும் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். இதன் காரணமாக கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் தொடங்கியுள்ளதால், மக்கள் இதமான கால நிலை உள்ள ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக படையெடுத்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை கொண்டாடி மகிழ சுற்றுலா தலமான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் மாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். நேற்று காலையும், இன்றும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் கார், பஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர்.
ஊட்டிக்கு செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தி, காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அங்கு மலர் கண்காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு வரும் மலர் செடிகளை பார்வையிட்டனர்.
மேலும் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் உள்ள அரியவகை செடிகள், மரங்களையும் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள புல் தரையில் அமர்ந்து பேசியும், குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.
ஊட்டி படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அங்கு படகு சவாரி செய்து தங்கள் பொழுதை போக்கினர்.
அரசு ரோஜா பூங்கா, பைக்காரா மற்றும் ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, கொடநாடு காட்சி முனை, லேம்ஸ்ராக், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக சுற்றுலா தலங்களை ஒட்டிய கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
கொடைக்கானலில் நேற்று முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே டோல்கேட்டில் 3 கி.மீ. தூரம்வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
அதன் பிறகும் வாகனங்கள் கடந்து செல்ல 1 மணிநேரத்திற்கும் மேலானது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் விட்டுவிட்டு சாரல்மழையும் பெய்த வண்ணம் இருப்பதால் நெரிசலில் சிக்கிய சுற்றுலா பயணிகள் தங்கள் ஓட்டல் அறைக்கு செல்ல சிரமப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் பேக்கேஜ் விடுமுறையில் வந்திருப்பதால் அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுற்றுலா இடங்களை பார்வையிட பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இன்று அதிகாலை சூரியோதம் பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டனர்.
அவர்களில் பலர் ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். மேலும் படகுகள் மூலம் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்று ரசித்தனர். பகவதி அம்மன் கோவிலிலும் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். இதன் காரணமாக கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.