தமிழ்நாடு செய்திகள்
கோத்தகிரியில் சாலையின் குறுக்கே உலா வந்த காட்டெருமைகள்.

கோத்தகிரியில் சாலையில் சுற்றி திரிந்த காட்டெருமை கூட்டம்

Published On 2022-04-14 08:55 IST   |   Update On 2022-04-14 08:55:00 IST
கடந்த 2 நாட்களாக கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் திடல் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வருகின்றன.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் திடல் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வருகின்றன.

இதற்கிடையே அந்த பகுதிகளை சேர்ந்த 3 தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சம்பவத்தன்று பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது காட்டெருமைகள் கூட்டமாக சாலையில் உலா வந்தன. இதனால் அச்சம் அடைந்த மாணவ, மாணவிகள் மீண்டும் தங்களது பள்ளி வளாகத்திற்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொண்டனர்.

காட்டெருமைகள் சாலையின் குறுக்கே நீண்ட நேரம் கொண்டு இருந்ததால் வாகன போக்குவரத்து ஏற்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சில மணி நேரங்கள் கழித்து காட்டெருமைகள் அங்கிருந்து சென்றன. இதையடுத்து வாகன போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சாலைகளில் அடிக்கடி காட்டெருமைகள் நடமாடி வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே காட்டெருமைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்றனர்.

Similar News