தமிழ்நாடு
தேவகோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் கணவர் மீது சரமாரி தாக்குதல்

தேவகோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் கணவர் மீது சரமாரி தாக்குதல் - காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது புகார்

Published On 2022-02-17 06:09 GMT   |   Update On 2022-02-17 06:09 GMT
தேர்தலுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 7-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் ராஜேஸ்வரி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2 முறை நகர்மன்ற உறுப்பினராக பணியாற்றி தற்போது 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

இவரது கணவர் ராஜேந்திரன். இவர் நேற்று மனைவிக்கு வாக்கு சேகரித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வள்ளியப்ப செட்டியார் ஊரணி அருகே வந்து கொண்டிருந்தார்.

தாயமங்கலம் மாரியம்மன் கோவில் பகுதியில் வந்தபோது ஹெல்மெட் அணிந்து வந்த 4 நபர்கள் ராஜேந்திரனை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

இது குறித்து ராஜேந்திரன் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். அதில், முன்னாள் நகர்மன்றத்தலைவர் வேலுச்சாமி, அவரது அண்ணன் மகன் தர்மரா ஜன், காங்கிரஸ் கட்சி வேட் பாளர் ரேவதி தர்மராஜன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் 4 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News