தமிழ்நாடு செய்திகள்
கைது

கத்தியை காட்டி மிரட்டி ஓட்டு கேட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது

Published On 2022-02-08 08:31 IST   |   Update On 2022-02-08 08:31:00 IST
மனைவிக்கு வாக்களிக்கும்படி கத்தியை காட்டி மிரட்டி ஓட்டுகேட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 42). காங்கிரஸ் கட்சி ஸ்ரீபெரும்புதூர் நகர எஸ்.சி. எஸ்.டி. துணைத்தலைவராக இருந்தவர். இவரது மனைவி தனலட்சுமி. இவர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் போட்டியிட காங்கிரஸ் மேலிடத்தில் விருப்பம் தெரிவித்தாக கூறப்படுகிறது. அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து பூபாலன் தனது மனைவி தனலட்சுமியை சுயேச்சையாக போட்டியிட களம் இறக்கினார்.

வேட்பு மனுக்கள் பரிசிலனை முடிந்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூபாலன் 1-வது வார்டில் உள்ள பொதுமக்களிடம் சுயேச்சையாக போட்டியிடும் தனது மனைவி தனலட்சுமிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

அங்கு ரோந்து பணியில் வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பூபாலனை கையும் களவுமாக கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News