தமிழ்நாடு
பள்ளிபாளையத்தில் பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சம் பிடிபட்டது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பள்ளிபாளையத்தில் பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சம் பிடிபட்டது.
பள்ளிப்பாளையம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இந்த நிலையில் பள்ளிபாளையம் பகுதியில் கைத்தறி ஆய்வாளர் ராஜேஸ்குமார் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பழனிசாமி, தியானேஸ்வரன் ஆகிய 2 பேர் இருந்தனர்.
மேலும் காரில் ரூ.3 லட்சம் இருந்தது. இதையடுத்து அதை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அந்த பணம் தேர்தல் ஆணைய அறிவுரைப்படி திருச்செங்கோடு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
காரில் வந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இந்த பணத்தை திரும்ப பெறலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.