தமிழ்நாடு
தமிழகம் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வாழ்த்து
பத்ம விருதுகளை பெருகின்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி:
நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 -ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது :
புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கொங்கம்பட்டு A.V.முருகையன், தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்ரமணியம், சௌகார் ஜானகி, S.பல்லேஷ் பஜன்திரி, S.தாமோதரன், R.முத்துக்கண்ணம்மாள், A.K.C.நடராஜன், டாக்டர் வீராசாமி சேஷையா ஆகியோருக்கும் மற்றும் இந்தியா முழுவதும் பத்ம விருதுகள் பெருகின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.