தமிழ்நாடு செய்திகள்
முத்தடுப்பூசி மருந்து வினியோகம் 2023-ல் தொடங்கும்- ஆய்வக இயக்குனர்
கோவை பிரஸ் காலனி பகுதியில் 30 ஏக்கரில் ரேபீஸ் மருந்து புதிய உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1907-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஸ்டியர் நிறுவனத்தில் வெறி நாய்க்கடி மருந்து தயாரிக்கப்பட்டது. அந்த மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது ரேபீஸ் நோய் கண்டறியும் மையமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தை கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி (டிபிடி) முத்தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்ற ரூ.137 கோடி செலவில் உலகத்தர கட்டுமானம், உள்கட்டமைகள் மேம்படுத்தப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு நிறைவு பெற்று ஜூலை மாதம் முதல் சோதனை பணிகள் தொடங்கப்பட்டன.
இதுதொடர்பாக பாஸ்டியர் ஆய்வக இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:-
கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி (டிபிடி) முத்தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கி, சோதனை நடந்து வருகிறது. இந்த மருந்தின் மூலப் பொருட்களின் தரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்னர் வணிக ரீதியாக வினியோகிக்க உரிமம் வழங்கும். உரிமம் கிடைத்தவுடன் முத்தடுப்பூசி மருந்து வினியோகிக்கப்படும். ஆண்டுக்கு 10 மில்லியன் டோஸ் முத்தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யப்படும். வருகிற 2023-ம் ஆண்டு வினியோகம் தொடங்கும்.
இந்த நிறுவனத்தில் ரேபீஸ் வெறிநாய் கடி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது தனியார் நிறுவனங்களில் இருந்து தான் ரேபீஸ் தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கோவை பிரஸ் காலனி பகுதியில் 30 ஏக்கரில் ரேபீஸ் மருந்து புதிய உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.
தற்போது நில பரிமாற்றத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளில் ரேபீஸ் தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கப்படும். இங்கு கொரோனா தடுப்பூசிகளை நிரப்புவது மற்றும் பேக்கிங் செய்வது உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் நிரப்பும் பணி தொடங்கும். மாதத்துக்கு ஒரு கோடி டோஸ்கள் நிரப்ப முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1907-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஸ்டியர் நிறுவனத்தில் வெறி நாய்க்கடி மருந்து தயாரிக்கப்பட்டது. அந்த மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது ரேபீஸ் நோய் கண்டறியும் மையமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தை கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி (டிபிடி) முத்தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்ற ரூ.137 கோடி செலவில் உலகத்தர கட்டுமானம், உள்கட்டமைகள் மேம்படுத்தப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு நிறைவு பெற்று ஜூலை மாதம் முதல் சோதனை பணிகள் தொடங்கப்பட்டன.
இதுதொடர்பாக பாஸ்டியர் ஆய்வக இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:-
கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி (டிபிடி) முத்தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கி, சோதனை நடந்து வருகிறது. இந்த மருந்தின் மூலப் பொருட்களின் தரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்னர் வணிக ரீதியாக வினியோகிக்க உரிமம் வழங்கும். உரிமம் கிடைத்தவுடன் முத்தடுப்பூசி மருந்து வினியோகிக்கப்படும். ஆண்டுக்கு 10 மில்லியன் டோஸ் முத்தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யப்படும். வருகிற 2023-ம் ஆண்டு வினியோகம் தொடங்கும்.
இந்த நிறுவனத்தில் ரேபீஸ் வெறிநாய் கடி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது தனியார் நிறுவனங்களில் இருந்து தான் ரேபீஸ் தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கோவை பிரஸ் காலனி பகுதியில் 30 ஏக்கரில் ரேபீஸ் மருந்து புதிய உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.
தற்போது நில பரிமாற்றத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளில் ரேபீஸ் தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கப்படும். இங்கு கொரோனா தடுப்பூசிகளை நிரப்புவது மற்றும் பேக்கிங் செய்வது உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் நிரப்பும் பணி தொடங்கும். மாதத்துக்கு ஒரு கோடி டோஸ்கள் நிரப்ப முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.