செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 113.59 அடியாக உயர்வு

Published On 2021-11-05 09:34 IST   |   Update On 2021-11-05 09:34:00 IST
மேட்டூர் அணைக்கு நேற்று 12 ஆயிரத்து 165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 11 ஆயிரத்து 772 கன அடியானது.
மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

ஒகேனக்கல்லில் நேற்று மாலை 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 12 ஆயிரத்து 165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 11 ஆயிரத்து 772 கன அடியானது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 112.95 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 113.59 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News