செய்திகள்
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி வருகை
கவர்னரின் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணியளவில் கோவைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வருகின்றனர்.
ஊட்டி ராஜ்பவனில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளதாக தெரிகிறது.
இதுவரை கவர்னர் பங்கேற்ற கூடிய நிகழ்ச்சிகள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. 5 நாள் பயணத்தை முடித்து கொள்ளும் கவர்னர் வருகிற 19-ந்தேதி ஊட்டியில் இருந்து சென்னை செல்கிறார். கவர்னரின் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணியளவில் கோவைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வருகின்றனர்.
ஊட்டி ராஜ்பவனில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளதாக தெரிகிறது.
இதுவரை கவர்னர் பங்கேற்ற கூடிய நிகழ்ச்சிகள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. 5 நாள் பயணத்தை முடித்து கொள்ளும் கவர்னர் வருகிற 19-ந்தேதி ஊட்டியில் இருந்து சென்னை செல்கிறார். கவர்னரின் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.