செய்திகள்
கொரோனா வைரஸ்

சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

Published On 2021-09-16 09:47 IST   |   Update On 2021-09-16 09:47:00 IST
தொற்று உறுதியான மாணவி படித்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவிகள் என 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அந்த மாணவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அந்த மாணவிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மாணவி படித்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் மாணவிகள் என 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

பரிசோதனை செய்து கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 11 மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News