செய்திகள்
முககவசம்

சென்னையில் ஒரே நாளில் முககவசம் அணியாத 1,278 பேருக்கு அபராதம்

Published On 2021-08-19 02:17 IST   |   Update On 2021-08-19 02:17:00 IST
7 பொது மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததால் ரூ.26 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டல அமலாக்க குழுவினரால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16-ந் தேதி ஒருநாள் மட்டும் சென்னையில் முக கவசம் அணியாத 1,278 தனிநபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த 16-ந் தேதி நடைபெற்ற 7 பொது மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததால் ரூ.26 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் 6-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 48 ஆயிரத்து 33 தனிநபர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 81 லட்சத்து 63 ஆயிரத்து 590 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News