செய்திகள்
அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என சசிகலா எங்கும் கூறவில்லை- கே.பி.முனுசாமி
அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்று சசிகலா எங்கும் கூறவில்லை என கே.பி.முனுசாமி எம்.பி. கூறினார்.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சசிகலா எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாத ஒருவர். அவரை பற்றி தொடர்ந்து நாங்கள் விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது. எந்த வகையிலும் தொடர்பு இல்லாத ஒரு நபரை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது நாகரிகமாக இருக்காது.
நான் தான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என சசிகலா எங்கும் கூறவில்லை.
சசிகலா ஊர்வலமாக செல்வதை நாடே தெரிந்து கொள்வதற்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இதை பற்றி அதிகம் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவால் துரோகி என்று அடையாளம் காணப்பட்டவர் டி.டி.வி.தினகரன். அவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு வகையான திட்டங்களை கொண்டு வருகிறார்.
இவர்கள் தவறு செய்தவர்கள் என்று மக்கள் முழுமையாக ஏற்று அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ஆகவே எந்த ரூபத்தில் வந்தாலும் அவர்கள், மக்கள் மத்தியில் செல்ல முடியாது.
எங்களுக்கு அரசியல் அனுபவம் உள்ளது. மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம். எங்கள் கூட்டணியில் யார் வருகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. நாங்கள் எங்கள் ஆட்சியில் மக்களுக்கு செய்த சேவைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறோம்.
எங்களுடைய கொள்கை வேறு, பா.ஜனதாவின் கொள்கை வேறு. அவர்கள் கூட்டணிக்காக எங்களுடன் இணைகிறார்கள். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால், அவர்களுடன் இணக்கமாக செல்லக்கூடிய காரணத்தால் தான் ஒரு வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பெற முடிந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் அவ்வாறு பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சசிகலா எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாத ஒருவர். அவரை பற்றி தொடர்ந்து நாங்கள் விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது. எந்த வகையிலும் தொடர்பு இல்லாத ஒரு நபரை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது நாகரிகமாக இருக்காது.
நான் தான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என சசிகலா எங்கும் கூறவில்லை.
சசிகலா ஊர்வலமாக செல்வதை நாடே தெரிந்து கொள்வதற்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இதை பற்றி அதிகம் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவால் துரோகி என்று அடையாளம் காணப்பட்டவர் டி.டி.வி.தினகரன். அவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு வகையான திட்டங்களை கொண்டு வருகிறார்.
இவர்கள் தவறு செய்தவர்கள் என்று மக்கள் முழுமையாக ஏற்று அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ஆகவே எந்த ரூபத்தில் வந்தாலும் அவர்கள், மக்கள் மத்தியில் செல்ல முடியாது.
எங்களுக்கு அரசியல் அனுபவம் உள்ளது. மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம். எங்கள் கூட்டணியில் யார் வருகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. நாங்கள் எங்கள் ஆட்சியில் மக்களுக்கு செய்த சேவைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறோம்.
எங்களுடைய கொள்கை வேறு, பா.ஜனதாவின் கொள்கை வேறு. அவர்கள் கூட்டணிக்காக எங்களுடன் இணைகிறார்கள். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால், அவர்களுடன் இணக்கமாக செல்லக்கூடிய காரணத்தால் தான் ஒரு வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பெற முடிந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் அவ்வாறு பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.