செய்திகள்
எல்கே சுதீஷ்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார்- எல்.கே.சுதீஷ்

Published On 2021-01-28 07:43 GMT   |   Update On 2021-01-28 07:43 GMT
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
குடியாத்தம்:

குடியாத்தம் நடுப்பேட்டையில் நகர தே.மு.தி.க. அலுவலகத்தையும், கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூரில் மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தையும் தே.மு.தி.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் திறந்து வைத்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

தற்போது வரை தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்வார்.

சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தே.மு.தி.க. எந்தக் கூட்டணியில் பங்கேற்கிறதோ, அந்த கூட்டணி தான் தேர்தலில் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News