செய்திகள்
கொலை

டார்ச் லைட்டால் தாக்கி தந்தை படுகொலை- மகன் கைது

Published On 2021-01-14 06:17 GMT   |   Update On 2021-01-14 06:17 GMT
டார்ச் லைட்டால் தாக்கி தந்தையை படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம்:

திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது தூதை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மலையாளம் (வயது65) . இவரது மகன் சங்கையா (38). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தந்தை- மகன் இருவருக்கும் வீடு பிரிப்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில் தந்தை மலையாளம் குடித்துவிட்டு வந்து மகனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் சங்கையா டார்ச் லைட்டால் பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மலையாளம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மகன் சங்கையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News