செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. தலைவர்களின் ஊழல் பட்டியல்களை வாசித்த முதலமைச்சர்

Published On 2021-01-06 13:39 IST   |   Update On 2021-01-06 13:39:00 IST
குடும்ப அரசியல் மட்டுமே தி.மு.க.வில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு:

பவானியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க.வினர் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி, பெரியகருப்பன், பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அவர்கள் இதுவரை வாய்தா வாங்கி தப்பித்து வருகின்றனர். இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போது இவர்கள் பற்றி தெரியவரும்.

குடும்ப அரசியல் மட்டுமே தி.மு.க.வில் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் தொடங்கி உதயநிதி, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இது மக்களை ஏமாற்றும் செயல். அ.தி.முக. ஆட்சி மட்டுமே மக்களுக்கான ஆட்சி. ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை வரும் தேர்தலிலும் நமது அரசு ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News