செய்திகள்
அர்ஜூன் சம்பத்

சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டி- அர்ஜூன் சம்பத் பேட்டி

Published On 2021-01-04 18:44 IST   |   Update On 2021-01-04 18:44:00 IST
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
கூடலூர்:

நீலகிரி மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கூடலூரில் நடந்தது. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கூடலூர் காந்தி திடல், தேவாலா, உப்பட்டி உள்பட 6 இடங்களில் கட்சி கொடியை அர்ஜுன் சம்பத் ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் கூடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது தொடர்பாக மதுரையில் நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது. 

கோவை தேவராயபுரத்தில் நடந்த கூட்டத்தில் தலித் பெண் ஒருவர் கேள்வி கேட்டதால் அவரை தி.மு.க.வினர் தாக்கி உள்ளனர். எனவே அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது இந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் தங்கம், நீலகிரி மாவட்ட பொது செயலாளர் சிவா உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News