செய்திகள்
புதுவை சுகாதார இயக்கக இயக்குனருக்கு கொரோனா தொற்று
புதுவை மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் உறுதுணையாக இருந்த சுகாதார இயக்ககத்தின் இயக்குனர் ஸ்ரீராமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் உறுதுணையாக இருந்த சுகாதார இயக்ககத்தின் இயக்குனர் ஸ்ரீராமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்டார். இதனையடுத்து அவரை பரிசோதனை செய்ததில் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அலுவலகம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் உறுதுணையாக இருந்த சுகாதார இயக்ககத்தின் இயக்குனர் ஸ்ரீராமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்டார். இதனையடுத்து அவரை பரிசோதனை செய்ததில் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அலுவலகம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர்.