செய்திகள்
உயிரிழப்பு

ஈஞ்சம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

Published On 2020-12-05 01:53 GMT   |   Update On 2020-12-05 01:53 GMT
ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன், அவருக்கு உதவிய தயாளன் இருவரையும் மின்சாரம் தாக்கியது.

மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர், அவருக்கு உதவியவர் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News