செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு- முதலமைச்சர் விளக்கம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.
* நீலகிரியில் கொரோனாவுக்கு இதுவரை 39 பேர் இறந்துள்ளனர்.
* 6,363 காய்ச்சல் முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளன.
* நீலகிரியில் ரூ.447 கோடியில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
* நீலகிரி மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக இனி கோவை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது.
* மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
* அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள். அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.
* நீலகிரியில் கொரோனாவுக்கு இதுவரை 39 பேர் இறந்துள்ளனர்.
* 6,363 காய்ச்சல் முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளன.
* நீலகிரியில் ரூ.447 கோடியில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
* நீலகிரி மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக இனி கோவை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது.
* மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
* அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள். அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே.
இவ்வாறு அவர் கூறினார்.