செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்பட 200 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-11-04 09:18 IST   |   Update On 2020-11-04 09:18:00 IST
முதல்-அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்பட மொத்தம் 200 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகிறார். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் பேசுகிறார்.

முதல்-அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள ஊழியர்கள் உள்பட மொத்தம் 200 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் முன் கொரோனா பாதிப்பு இல்லை என்று சோதனை செய்த முடிவை காண்பித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

Similar News