செய்திகள்
சித்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
சித்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீ காளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் வி.கோட்டா மண்டலம் திம்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா (வயது 40) விவசாயி. இவர் நேற்று முன்தினம் நவராத்திரி பண்டிகையை யொட்டி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வி.கோட்டா அரசு போக்குவரத்து பணிமனை அருகில் சென்றபோது காஜூபேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கட்ராமப்பாவை உறவினர்கள் மீட்டு வி.கோட்டா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வி.கோட்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லம்ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.