செய்திகள்
அரசு ஆஸ்பத்திரிக்கு மின் விசிறி வழங்கி நன்றி தெரிவித்த விவசாயி
கொரோனா காலத்தில் தனது மனைவியை நன்றாக பார்த்துக்கொண்டதோடு, சுக பிரவசத்துக்கு வழிவகுத்த டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மின் விசிறியை அரசு ஆஸ்பத்திரிக்கு விவசாயி அன்பளிப்பாக வழங்கினார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வன்னியன்விடுதி கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவரது மனைவி தமிழரசி (34). கர்ப்பிணியான இவர் கடந்த வாரம் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வன்னியன்விடுதி கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவரது மனைவி தமிழரசி (34). கர்ப்பிணியான இவர் கடந்த வாரம் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக அங்குள்ள டாக்டர்கள் தமிழரசியை மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் தாயும், சேயும் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது தனது மனைவியை நன்றாக பார்த்துக்கொண்டதோடு, சுகப் பிரவசத்துக்கு வழிவகுத்த டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரமேஷ், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மின் விசிறியை அரசு ஆஸ்பத்திரிக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் தம்பதிக்கு நன்றி தெரிவித்ததோடு, தமிழக அரசின் அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கி அனுப்பி வைத்தது.