செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

புதுவை அரசுக்கு  கெட்ட பெயர் ஏற்படுத்தும் எண்ணத்தில் கவர்னர் செயல்படுகிறார்- நாராயணசாமி

Published On 2020-10-01 09:10 GMT   |   Update On 2020-10-01 09:10 GMT
புதுவை அரசுக்கு  கெட்ட பெயர் ஏற்படுத்தும் எண்ணத்தில் கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரதி, சுதேசி பஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் விருப்ப ஓய்வு மூலம் வெளியே செல்லலாம் என அறிவித்திருந்தோம். இதற்கான கோப்பை கவர்னருக்கு அனுப்பியிருந்தோம். ஆனால், கவர்னர் இதை கண்டுகொள்ளாமல் பஞ்சாலைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

சுதேசி, பாரதி மில்லை பொறுத்தவரை 200 தொழிலாளர்கள் உள்ளனர். 2 மாத ஊதியம் வழங்க ரூ.1 கோடி 40 லட்சம் வழங்க கவர்னருக்கு கோப்பு அனுப்பினோம். ஆனால் கவர்னர் பஞ்சாலைகளை மூட உத்தரவிட்டு துறைக்கு கோப்பு அனுப்பி உள்ளார்.

சம்பளம் வழங்கவே நாங்கள் கோப்பு அனுப்பினோமே தவிர மூடுவதற்கு இல்லை. கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளை மிரட்டி மில்களை மூட செய்துள்ளார். தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சிக்கு கெட்ட பெயர் வாங்கிதர வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்னர் கிரண்பேடி பஞ்சாலை மூடுவிழாவை நடத்தி வருகிறார். மூடுவிழா நடத்துவதற்கு கவர்னர் தேவையா?அதுதான் அவர் வேலையா?

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் வெகு விரைவில் இல்லை. கிரண்பேடியின் அராஜகத்தின் உச்சகட்டம் இது. கவர்னராக செயல் படாமல், மக்களுக்கு விரோதமான செயலில் ஈடுபட்டு வருகிறார். சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கினால் அதை தடுப்ப தற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்தால் எங்களது அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஏனென்றால் மத்தியில் வேறு ஆட்சி உள்ளது. பா.ஜ.க.வின் இரட்டைவேடம் மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு தெரி யும்.

புதுவை மாநிலத்தில் அரசை செயல்படாமல் விட கவர்னர் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் நல்ல பெயருடன் வெளியே செல்வார்.

இவ்வாறு முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Tags:    

Similar News