செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் செயல்படுகிறார்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-10-01 12:03 IST   |   Update On 2020-10-01 12:03:00 IST
ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாயின் ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என பிரதமரே பாராட்டும் வகையில் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி உள்ளது.

அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது நாகரிகம் அல்ல என்பதுதான் எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News