செய்திகள்
பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவில் இருந்து மீண்ட 93 வயது மூதாட்டி
பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் தீவிர சிகிச்சை மற்றும் நேரடி கண்காணிப்பினால் கொரோனாவில் இருந்து 93 வயது மூதாட்டி மீண்டு வந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு சம்பத் நகர் பகுதியை சேர்ந்த 93 வயது மூதாட்டி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 13-ந் தேதி சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 92 சதவீத நுரையீரல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 18-ந் தேதி மூதாட்டிக்கு நோயின் பாதிப்பு குறைந்த நிலையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோயின் தாக்கம் குறைந்து அவர் குணமடைந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 93 வயது மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர்களின் தீவிர சிகிச்சை மற்றும் நேரடி கண்காணிப்பினால் மூதாட்டி குணமடைந்ததாக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மணி தெரிவித்தார்.
ஈரோடு சம்பத் நகர் பகுதியை சேர்ந்த 93 வயது மூதாட்டி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 13-ந் தேதி சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 92 சதவீத நுரையீரல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 18-ந் தேதி மூதாட்டிக்கு நோயின் பாதிப்பு குறைந்த நிலையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோயின் தாக்கம் குறைந்து அவர் குணமடைந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 93 வயது மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர்களின் தீவிர சிகிச்சை மற்றும் நேரடி கண்காணிப்பினால் மூதாட்டி குணமடைந்ததாக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மணி தெரிவித்தார்.