செய்திகள்
தனியார் பஸ்

ஈரோடு மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும்- சங்க தலைவர் தகவல்

Published On 2020-09-19 07:20 GMT   |   Update On 2020-09-19 07:20 GMT
ஈரோடு மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று சங்க தலைவர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது பின்னர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்குள் போக்குவரத்து நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டத்திற்குள் மீண்டும் அரசு போக்குவரத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் கடந்த 7-ந்தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தனியார் பஸ்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 268 தனியார் பஸ்கள் உள்ளன. இதில் மாவட்டத்துக்குள் 40 பஸ்களும், வெளி மாவட்டங்களுக்கு 228 பஸ்களும் இயக்கப்படுகின்றன. 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்பதால் தனியார் பஸ்களை இயக்காமல் இருந்து வந்தோம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சேலம், திருப்பூர், கோவையில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு சில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News