செய்திகள்
நீலகிரியில் கள்ளநோட்டு புழக்கம்: தந்தை-மகன் கைது
நீலகிரியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட தந்தை, மகனை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் எடக்காடு பகுதியில் மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரில் 2 பேர் இருந்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த காரை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை திறந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் இருந்தன. அவை அனைத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஆகும். இதையடுத்து போலீசார் அதில் இருந்த 12 ஆயிரத்து 750 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து காரில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் எடக்காடு பாதகண்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(53), அவரது மகன் மகேந்திரன் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்து மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புழக்கத்தில் விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் 2 பேரும் தாங்கள் வேலை பார்த்தற்கு சம்பளமாக இந்த பணத்தை தந்ததாக போலீசாரிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இருப்பினும் போலீசார் இவர்கள் அருகே உள்ள கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்து இங்கு புழக்கத்தில் விட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்து அந்த கோணத்திலும் விசாரிக்கின்றனர்.
மேலும் இவர்கள் மஞ்சூர் பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது போல் மாவட்டத்தின் வேறு எந்த பகுதிகளிலும் புழக்கத்தில் விட்டுள்ளனரா? என்பது குறித்தும், இவர்களுக்கு வேறு யாராவது உதவி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து தந்தை, மகனிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் எடக்காடு பகுதியில் மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரில் 2 பேர் இருந்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த காரை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை திறந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் இருந்தன. அவை அனைத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஆகும். இதையடுத்து போலீசார் அதில் இருந்த 12 ஆயிரத்து 750 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து காரில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் எடக்காடு பாதகண்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(53), அவரது மகன் மகேந்திரன் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்து மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புழக்கத்தில் விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் 2 பேரும் தாங்கள் வேலை பார்த்தற்கு சம்பளமாக இந்த பணத்தை தந்ததாக போலீசாரிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இருப்பினும் போலீசார் இவர்கள் அருகே உள்ள கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்து இங்கு புழக்கத்தில் விட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்து அந்த கோணத்திலும் விசாரிக்கின்றனர்.
மேலும் இவர்கள் மஞ்சூர் பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது போல் மாவட்டத்தின் வேறு எந்த பகுதிகளிலும் புழக்கத்தில் விட்டுள்ளனரா? என்பது குறித்தும், இவர்களுக்கு வேறு யாராவது உதவி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து தந்தை, மகனிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.