செய்திகள்
அரசு பள்ளியில் மகளை சேர்த்த வட்டார கல்வி அதிகாரி

ஊட்டி அருகே அரசு பள்ளியில் மகளை சேர்த்த வட்டார கல்வி அதிகாரி

Published On 2020-08-21 19:45 IST   |   Update On 2020-08-21 19:45:00 IST
வட்டார கல்வி அலுவலர் நேரடியாக அரசு பள்ளிக்கு வந்து தனது மகளை அப்பள்ளியில் சேர்த்தது அங்கு பணியில் இருந்த ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஊட்டி:

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் கடந்த 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

குன்னூர் கல்வி மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலராக கார்த்திக் பணியாற்றி வருகிறார். அவர் தனது தொடக்கக் கல்வியை சொந்த ஊரான ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்தார். தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதால், கார்த்திக் படித்த அதே பள்ளிக்கு மனைவி தீபாவுடன் சென்று தனது மகள் அனன்யாவை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்.

வட்டார கல்வி அலுவலர் நேரடியாக பள்ளிக்கு வந்து தனது மகளை சேர்த்தது அங்கு பணியில் இருந்த ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை பலரும் வரவேற்றதுடன், இதுபோன்று அதிகாரிகள் பலரும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தால், நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Similar News