செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூரில் புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-16 10:28 IST   |   Update On 2020-08-16 10:28:00 IST
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,436 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 8,236 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,436 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7,010 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News