செய்திகள்
கரும்பு சாகுபடி இணைய தளம் மூலம் பயிற்சி

விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி குறித்து இணைய தளம் மூலம் பயிற்சி

Published On 2020-08-01 16:56 IST   |   Update On 2020-08-01 16:56:00 IST
வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் கடலூர் வட்டாரம் சார்பில் ஒரு பரு கரணை மூலம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து மாவட்ட விவசாயிகளுக்கு இணைய தளம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலூர்:

வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை, வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் கடலூர் வட்டாரம் சார்பில் ஒரு பரு கரணை மூலம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து மாவட்ட விவசாயிகளுக்கு இணைய தளம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களில் இருந்தும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகங்களில் இருந்தபடியே பயிற்சியில் கலந்து கொண்டனர்.

பயிற்சியை கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கடலூர் வேளாண்மை துணை இயக்குனர் வேல்விழி, வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை விரிவாக்கத்துறை தலைவர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் ஒரு பரு கரணை மூலம் நாற்றங்கால் அமைத்து பின் நடவு செய்தல், உரமிடுதல், பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் கண்ணாரப்பேட்டை மணி நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பயிற்சியில் கடலூர் வேளாண்மை அலுவலர் சுகன்யா, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர் அருண்ராஜ், கண்ணன், அட்மா திட்ட அலுவலக கணினி இயக்குனர் சிவக்குமார், கணக்காளர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விவசாயிகளை நேரில் வரவழைக்காமல் புது முயற்சியாக இணைய தள வழி மூலம் அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளனர்.

Similar News