செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

வேலூரில் இன்று மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-29 10:26 IST   |   Update On 2020-07-29 10:26:00 IST
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,534 ஆக உயர்ந்துள்ளது.

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Similar News