செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 108 பேருக்கு கொரோனா

Published On 2020-07-28 02:44 GMT   |   Update On 2020-07-28 02:44 GMT
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,406 ஆக உயர்ந்துள்ளது.

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 53 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News