செய்திகள்
கொரோனா வைரஸ்

உதகையில் 60 வயது பெண்ணால் 200 பேருக்கு பரவிய கொரோனா

Published On 2020-07-26 10:15 GMT   |   Update On 2020-07-26 10:15 GMT
நீலகிரி மாவட்டம் உதகையில் 60 வயது பெண்ணால் 200 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதகை:

நீலகிரி மாவட்டம் உதகை அருகே தங்காடு ஒரநள்ளி என்ற கிராமத்தில் 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்காக படுகர் இன மக்கள் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து வந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கலந்து கொண்டார். காய்ச்சலோடு வந்த அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பெண் தனக்கு சோதனை செய்ததை மறைத்து திருமணம் மற்றும் முள்ளிக்கூர் துக்க நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.

பரிசோதனை முடிவில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் அவசர அவசரமாக அப்பெண்ணின் தொடர்புகளை தேடிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

இதில் திருமணத்தில் கலந்துகொண்ட 190 பேருக்கு கொரோனா தொற்று பரவியது உறுதியானது. இதையடுத்து தங்காடு ஒரநள்ளி கிராமமே அச்சத்தில் உறைந்து போனது. இந்நிலையில் கொரோனாவை பரப்பிய பெண் உட்பட 2 பேர் தொற்றுக்கு பலியாகினர்.

திருமணம் மற்றும் துக்க நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் 8 கிராமங்களுக்கு சென்றதால் அங்கும் கொரோனா பரவி எண்ணிக்கை கூடியது.

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கடும் நடவடிக்கை காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. அதற்குள் கொரோனாவால் 200 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags:    

Similar News