செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது

Published On 2020-07-26 04:20 GMT   |   Update On 2020-07-26 04:20 GMT
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,132 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 89 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 56வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 7,758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,055லிருந்து 1,58,813 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று புதிதாக 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,132 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News