செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

செங்கல்பட்டில் புதிதாக 440 பேருக்கு கொரோனா

Published On 2020-07-24 15:42 IST   |   Update On 2020-07-24 15:42:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,328 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 440 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 11,328 ஆக உயர்ந்துள்ளது.

Similar News