செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் இன்று 67 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-15 05:53 GMT   |   Update On 2020-07-15 05:53 GMT
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 582 பேர் உயிரிழந்துள்ளனர்.    

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,67,665 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,49,007 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10,695  பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,47,324 பேருக்கும், டெல்லியில் 1,15,346 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News