செய்திகள்
கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் ஓய்வு: புதிய கலெக்டர் நியமனம்
கடலூர் மாவட்ட ஆட்சியாளராக உள்ள அன்புச் செல்வன் இன்றுடன் ஓய்வு பெறுவதால், புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அன்புச் செல்வன். இவர் கொரோனா தடுப்புப்பணியை மிகச் சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில் இன்றுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.
இதனால் கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சகாமுரியை நியமித்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.