செய்திகள்
கொரோனா தொற்று பரிசோதனை முகாம்

புவனகிரியில் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-06-29 12:55 IST   |   Update On 2020-06-29 12:55:00 IST
துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முகாம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
புவனகிரி:

புவனகிரி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முகாம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் ஜானகிராமன், சித்தமருத்துவர் ஜெயராஜ், சுகாதார ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் கபசுர குடிநீர் பொடி, வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் புவனகிரி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் ராசு ராஜ்குமார் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News