செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை- நாராயணசாமி

Published On 2020-06-16 14:45 GMT   |   Update On 2020-06-16 14:45 GMT
தமிழகத்தில் இருந்து வருவோர் இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் அதை சுற்றி அமைந்துள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து இருக்கிறது.

கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க சென்னையில் வருகிற 19-ந் தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னையை யொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள புறநகர் பகுதிகளுக்கும் இது பொருந்தும்.

புதுவையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் கண்டிப்பாக தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. இதையும் மீறி அலட்சியமாக இருந்தால் தொற்று பாதிப்பு அதிகமாகும். எனவே தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்த்து எச்சரிக்கையாக வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வருவோர் இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கடலூர், விழுப்புரத்தில் இருந்து மருத்துவ உதவிக்காக வருவோர் தவிர பிறருக்கு புதுச்சேரிக்குள் அனுமதியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News